×

கீரை சோயா கூட்டு

தேவையானவை:

பாசிப்பருப்பு-அரைகப்,
முளைக்கீரை-ஒரு கட்டு,
சோயா உருண்டைகள்-5 அல்லது6,
சின்ன வெங்காயம்-4,
பூண்டு-4 பல்,
பச்சை மிளகாய்-2,
மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2,
எண்ணெய்-2 டீஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேகவைத்துக் கொள்ளுங்கள். கீரையைப் பொடியாக நறுக்கி,சிறிது உப்பு சேர்த்து, குக்கரில் அரை கப் தண்ணீரும் சேர்த்து, ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.பிறகு, பிரஷரை வெளியேற்றி, மூடியைத் திறந்தால் கீரை நிறம் மாறாமல் இருக்கும்.சோயா உருண்டைகளை 2 டம்ளர் கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து,தண்ணீரில் 2 முறை போட்டு அலசிப் பிழிந்து, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சின்னவெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். வெந்த பருப்புடன்,வெங்காயம், பச்சை மிளகாய், சோயா சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம்கொதிக்கவிட்டு கீரை சேருங்கள். இதை 2 நிமிடம் கொதிக்கவிட்டு, எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்குங்கள். சப்பாத்தி, சாதத்துக்கு சுவைசேர்க்கும் கூட்டு இது.

The post கீரை சோயா கூட்டு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...